Sunday, August 1, 2010

குன்னூருக்கு அப்புறம் குரூரம் பாகம் : 1



நான்கு நாட்கள் முன்பு ஊட்டி வந்தோம். வருடத்துக்கு ஒருமுறை கோடையில் இந்தமாதிரி நாங்கள் குடும்பத்துடன் ஊட்டி வந்து ஒருவாரம் தங்கிவிட்டு போவது வழக்கம். உண்மையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு அப்புறந்தான் ஊட்டியில் இருந்து கிளம்புவதாக திட்டம். ஆனால் இன்று காலையில் என் ஆபீசில் இருந்து வந்த போன் அந்த திட்டத்தை குலைத்தது. ‘அவசர வேலை.. உடனே வா..’ என உத்தரவு வந்தது. குடும்பத்துடன் மீண்டும் கோயமுத்தூர் கிளம்பி விட்டேன். இப்படி திட்டம் எல்லாம் பாழாய்ப் போனதே என்று எரிச்சலுடன் கார் ஓட்டியவனை, மேலும் எரிச்சலுற செய்தது எனக்கு முன்னால் சென்று கொண்டு இருந்த கார்...

நானே கோயமுத்தூர் செல்லும் அவசரத்தில் இருக்கிறேன். எனக்கு முன்னால் சென்ற அந்த குவாலிஸ் ரொம்ப நேரமாக வழிவிடாமலே சென்று கொண்டிருந்தது. இரண்டு மூன்று முறை ஹாரன் அடித்து பார்த்தேன். புண்ணியம் இல்லை. எரிச்சலில் அந்த காரை ஓட்டியவனை திட்டினேன்.

"அறிவு கெட்டவன்.. வண்டியா ஓட்டுறான்..."

"என்னாச்சுடா..?" பின்னால் இருந்து அம்மா கேட்டாள்.

"ரொம்ப நேரமா சைட் குடுக்காமலே போயிட்டு இருக்கான்மா..."

"அதனால என்ன..? கொஞ்சம் பொறுமையாவே போலாம்டா .."

"புரியாம பேசாதம்மா.. ஈவினிங் நான் ஆபீஸ்ல இருக்கணும்.. ஸ்பீடா போனாதான் முடியும்.. இந்த குவாலிஸ் வேற இப்படி டார்ச்சர் பண்ணுது.."

"அப்படியே போய் அவனை இடிச்சு தள்ளிவிட்டுட்டு ஓவர்டேக் பண்ணுன்னா.." பின்னாலிருந்து அக்கா மல்லிகா சிரித்துக்கொண்டே சொன்னாள்.

"ம்ம்ம்... அப்படி பண்ணினாதான் வேலைக்கு ஆகும் போல இருக்கு..."

"ஏய்...சும்மா இருக்க மாட்ட...?" அம்மா தங்கையை தங்கையை அதட்டினாள்.

"அம்மா சொல்றதுதான் கரெக்டுனா.. கொஞ்சம் பொறுமையா போயேன்.. என்ன அவசரம்..?..." என்றாள் தங்கை தேவி .

"ம்ம்... உனக்கு என்ன.. வீட்ல போய் நல்லா குறட்டை விட்டு தூங்கப் போற.. என் அவசரம் எனக்குதான் தெரியும்..."

சொன்னாவாறே நான் காரின் டாப்கியரை போட்டேன். ஆக்சிலரேட்டரில் காலை வைத்து அழுத்தினேன். கார் சீறியது. குவாலிசை ஓவர்டேக் செய்ய நல்ல சந்தர்ப்பத்தை பார்த்திருந்தேன். ஒரு ஹேர்பின் வளைவில் அந்த குவாலிஸ் மெதுவாக திரும்பியபோது எனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. படக்கென்று காரை முன்னால் செலுத்தி, அந்த குவாலிசை முந்தினேன். எளிதாக ஓவர்டேக் செய்துவிடலாம் என நினைத்த நான், கடைசி வினாடியில்தான் அது தவறு என புரிந்து கொண்டேன். என்னுடைய காரின் பின்பாகம் 'தட்ட்ட்'டென்று அந்த குவாலிசின் முன்பாகத்தில் தட்டியது.

அந்த குவாலிஸ் சற்று நிலைகுலைந்து படக்கென்று ப்ரேக் போட்டு நின்றது. நானும் காரை நிறுத்தலாமா என முதலில் யோசித்தேன். அப்புறம் அது நல்ல யோசனை இல்லை என்று பட்டது. நான் அவசரமாக கோயமுத்தூர் சென்றாக வேண்டும். இவர்களோடு பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருக்க நேரம் இல்லை. காரின் வேகத்தை மேலும் அதிகரித்து பறக்க ஆரம்பித்தேன். காரில் தட்டிய சத்தம் கேட்டதும் அம்மா பதறினாள்.

"கண்ணன ... என்னப்பா சத்தம்..?"

"அந்த குவாலிஸ்ல லேசா தட்டிட்டேன்மா..."

"ஐயையோ..!! வண்டியை நிறுத்துப்பா... என்னாச்சோ...?"

"ஒன்னும் இல்லைம்மா.. லேசாதான் தட்டினேன்.. ஒன்னும் ஆயிருக்காது.. இப்போ காரை நிறுத்தி அவன் கூட சண்டை போடலாம் எனக்கு நேரம் இல்லை... விடு..."

சொன்னாவாறு நான் காரின் வேகத்தை கூட்டினேன். அம்மாவும் சமாதானமாகி அமைதியானாள். தங்கை தேவி லேசாக என்னை முறைத்து பார்த்தாள். நான் செய்தது அவளுக்கு பிடிக்கவில்லை என்று புரிந்தது. 'கடைசில நான் சொன்ன மாதிரியே செஞ்சிட்ட...' என்று பின்னால் இருந்து அக்கா சிரிப்பது கேட்டது. நான் இருவரையும் கண்டு கொள்ளாமல் காரை ஓட்டினேன்.

ஒரு ஐந்து நிமிடம் இருக்கும். எதேச்சையாக ரியர்வ்யூ மிர்ரரை பார்த்த நான் அதிர்ந்தேன். அந்த குவாலிஸ் படுவேகமாக எங்கள் காரை ஃபால்லோ செய்வது தெரிந்தது. இப்போது எனக்கு இதயத்துடிப்பு எகிற ஆரம்பித்தது. விட மாட்டான் போல இருக்கிறதே..? வீம்பு பிடித்தவன்..? நான் காரின் வேகத்தை பலமடங்கு கூட்டினேன். எனக்கு இந்த மாதிரி ஹில்ஸில் கார் ஓட்டி நல்ல பழக்கம். அந்த வேகத்துடனும் லாவகமாக என்னால் காரை ஓட்ட முடிந்தது. குவாலிஸ் எங்கள் காரை ஃபால்லோ செய்வதை மற்றவர்களிடம் சொல்லலாமா என முதலில் யோசித்த நான், பின்பு மறைத்து விட்டேன். என்னுடைய வேகத்தில் அந்த குவாலிஸ் கொஞ்சம் கொஞ்சமாக என் பார்வையில் இருந்து மறைய ஆரம்பித்தது.

குன்னூர் வந்து மற்ற கார்களோடு கலந்தபோது குவாலிஸ் முற்றிலும் காணாமல் போனது. குன்னூரை தாண்டி மேட்டுப்பாளையம் சாலையில் காரை செலுத்தினேன். குவாலிஸ் காணாமல் போனது என் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால் அந்த நிம்மதி ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. அந்த ஆளில்லாத சாலையில், சுற்றிலும் மரங்கள் அடர்ந்திருந்த பாதையில் நான் பொறுமையாக காரை ஓட்டிக்கொண்டு சென்றபோது, எங்கிருந்துதான் வந்தது என்றே தெரியவில்லை. அந்த குவாலிஸ் படக்கென்று எங்கள் கார் முன்னால் வந்து, ப்ரேக்கிட்டு நின்றது. நான் பதறிப்போய் பட்டென்று பிரேக்கில் கால் வைத்து அழுத்தினேன்.

வசமாக மாட்டிக்கொண்டோம் என்று எனக்கு தோன்றியது. காணாமல் போன க்வாலிஸ் கண் முன்னாடி வந்து நிற்க, அதிர்ச்சியானேன். என்ன செய்யப் போகிறானோ என்று கொஞ்சம் பதட்டமாக இருந்தது. என்னுடைய பதற்றம் எங்கள் வீட்டு பெண்களுக்கும் பற்றிக் கொண்டது. எல்லோரும் கவலை தோய்ந்த முகத்துடன் குவாலிசையே பார்த்தார்கள். இப்போது குவாலிசின் முன் கதவு திறந்தது. முகத்தில் முள்முள்ளாய் தாடியோடு ஒருவன் இறங்கினான். ஆள் உயரமாக வாட்டசாட்டமாய் இருந்தான். நேராக எங்கள் காரை நோக்கி வந்தான். குனிந்து கார் ஜன்னல் வழியாக பார்த்து, என்னிடம் சொன்னான்.

"கீழ எறங்குடா.." அவன் குரலில் கோபம் கொப்பளித்தது....

"எ...எதுக்கு...?" நான் புரியாத மாதிரி கேட்டேன்.

"ங்கோத்தா... வண்டியை இடிச்சுட்டு நிக்காம வர்ற...? எறங்குடா கீழ..."

அவனின் கெட்ட வார்த்தைக்கு என் அம்மாவும், தங்கைகளும் முகத்தை சுளித்தார்கள். காதுகளை பொத்திக் கொண்டார்கள். இப்போது எனக்கு கோபம் வந்தது.

"ஹலோ... கொஞ்சம் மரியாதையா பேசுங்க.. பொம்பளைங்கள்லாம் இருக்காங்கல்ல...?"

சொன்னபடியே நான் காரை விட்டு இறங்கினேன். அந்த தாடிக்காரன் ஜன்னல் வழியாக காருக்கு உள்ளே பார்வையை வீசினான். என் அம்மாவையும், என் அக்காவையும் தங்கையும் கெட்டதனமாய் ஒரு பார்வை பார்த்தான். முகத்தில் புன்னகையுடன் என்னை ஏறிட்டான். நான் அவனை முறைத்துக் கொண்டிருக்கும்போதே, அந்த குவாலிசின் மற்ற கதவுகள் திறந்தன. அதற்குள் இருந்து தடிதடியாய் மேலும் மூன்று பேர் இறங்கினார்கள். ஒரு தடியன் அந்த தாடிக்காரனிடம் கேட்டான்.

"ங்கோத்தா.. என்னடா சொல்றான் அவன்...?"

"பொம்பளைங்க இருக்காங்களாம்.. அண்ணனுக்கு மரியாதை வேணுமாம்.." என்று அந்த தாடி நக்கலாக சொன்னான்.

"ஏய்.. வண்டியை இடிச்சுட்டு ஓடி வந்துட்டு.... பாடு... உனக்கெல்லாம் மரியாதை குடுக்கணுமா..?" என்றான் அந்த தடியன் தன் முஷ்டியை மடக்கிக் கொண்டு.

நடப்பதை பார்த்து இப்போது என் அம்மாவும், என் அக்காவும், தங்கையும் கலவரமானார்கள். அவர்கள் முகத்தில் ஒரு விதமான பீதி படர்வது தெரிந்தது. நான் சற்று குரலை உயர்த்தினேன்.

"ஹலோ.. கொஞ்சம் டீசண்டா பிஹேவ் பண்ணுங்க.. தப்பு என்மேல மட்டும் இல்லை.. நான் அவசரமா கோயமுத்தூர் போயிட்டு இருக்கேன்.. நீங்க ரொம்ப நேரமா சைடே கொடுக்கலை.. அதான் வேற வழி இல்லாம நானே ஓவர்டேக் பண்ணினேன். தெரியாம லைட்டா இடிச்சுடுச்சு..."

"தெரியாம இடிச்சிருச்சா...? த்தா.. சரி.. இடிச்சது ஓகே... இடிச்சுட்டு நிக்காம வர்ற...? எவ்வளவு திமிரு உனக்கு.. கேனைப்..." அந்த தாடி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, இன்னொருவன்,

"ஏய்.. என்ன மாமு.. இவன்கிட்ட போய் வளவளன்னு பேசிக்கிட்டு... பொளிச் பொளிச்சுன்னு நாலு அப்பு அப்புவியா.. தேவடியா மவனை..." என்றான்.

இப்போது எனக்கு சுரீர் என்று ஆத்திரம் வந்தது. பெற்ற அம்மாவை தேவடியா என்றால் யாருக்குத்தான் கோபம் வராது..? எனக்கும் வந்தது. அவர்களை பார்த்து சீறினேன்.

"ஹலோ... மைன்ட் யுவர் வேர்ட்ஸ்.. என்ன ரொம்ப ஓவரா பேசுறீங்க..? இடிச்சுட்டு நிக்காம வந்துட்டேன்.. அதுக்கு என்ன இப்போ..? கொஞ்சம் கூட டீசன்சியே இல்லாம பேசுறீங்க..? இப்படி பொம்பளைங்கலாம் இருக்குறப்போ.. இவ்வளவு இன்டீசண்டா பிஹேவ் பண்றீங்களே..? நீங்கள்லாம் ஆம்பளைங்களா...?"

நான் படபடவென பொறிந்து தள்ள, அவர்கள் பட்டென்று அமைதியானார்கள். மற்ற மூவரும் அந்த தாடிக்காரனையே பார்த்தார்கள். அவன் என் முகத்தை பார்த்து அழகாக புன்னகைத்தான். நான் புரியாமல் அவனையே பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் அந்த அழகுப்புன்னகை குரூரப் புன்னகையானது. 'மாமு அதை குடு' என்றவாறு அவன் பின்னால் கை நீட்டினான். பின்னால் இருந்தவன் அவன் கையில் எதையோ திணித்தான். அது என்ன என்று பார்ப்பதற்காக, நான் என் தலையை சாய்த்தபோது, என் நெற்றிப்பொட்டில் 'ச்ச்சத்' என்று ஒரு அடி வந்து விழுந்தது.

நான் என் வாழ்நாளில் அப்படி உயிர் போவது மாதிரியான ஒரு வலியை அனுபவித்ததில்லை. தலை சுக்குநூறாய் உடைந்துவிட்டது மாதிரி ஒரு வலி. அப்படியே நிலைகுலைந்து, கண்கள் செருக மயங்கி சரிந்தேன். மயங்குவதற்கு முந்தய வினாடி, அவன் கையில் திணிக்கப்பட்டது இரும்பால் ஆன ஒரு ராடு என்பதை என் மூளை எனக்கு உணர்த்தியது. என் அம்மாவும், அக்காவும், தங்கையும்.. "ஆ... ஆ...!!" என்று அலறி கூச்சலிடுவது எங்கேயோ தொலைவில் கேட்டது...

நான் மறுபடியும் கண்விழித்தபோது என் தலை வின்வின்னென்று தெறித்தது. என் நெற்றியில் இருந்து புறப்பட்ட ரத்தம், கன்னம் வரை வழிந்து உறைந்து போயிருந்தது. எனக்கு முன்னால் எல்லாவற்றையும் அடைத்துக் கொண்டு அந்த தாடிக்காரன் உட்கார்ந்திருந்தான். அவன் முகத்தில் புன்னகை. நான் மயங்கி சரியும்போது பார்த்த அதே குரூரப் புன்னகை. நான் எழுந்துகொள்ள முயன்றேன். முடியவில்லை. என் கையை இறுக்கமாக பின்னால் கட்டியிருந்தார்கள். நான் தரையில் கால்களை நீட்டி அமர்ந்திருக்க, எனக்கு பின்னால் இருந்த ஒரு மரத்தோடு என் கைகளை பிணைத்திருந்தார்கள். அவன் எழுந்து கொண்டான்.

"அண்ணன் கண்ணைத் தெறந்துட்டாருடா.. ஷோ ஆரம்பிக்கலாம்.." என்றான்...

தொடரும்.............

No comments:

Post a Comment